இன்று நெடுந்தீவு முகிலன் அண்ணா இயக்கத்தில் வெளியான பாற்கரன் குறுந்திரைப்படத்தை பார்க்க என் நண்பர்களையும் அழைத்து கொண்டு எம்மவரின் படைப்பை முதல் முறையாக பெரிய திரையிலே பார்க்க ஆவலாக செனறேன்.
என் எதிர்பார்ப்புக்கும் மேலாக என்னை திருப்தி படுத்தியது
'' பாற்கரன்''.
ஆரம்பத்தில் வெளியீடு என்ற பெயரில் பலரின் உரையாடல்கள் எம்மை சோர்வடைய வைத்தன. இருந்தும் படத்தை பார்க்க ஆவலாக இருந்தோம்.1 1/2 மணித்தியாலங்களின் பின் படத்தை திரையிட்டனர்.
படத்திலே முதலில் சொல்லவேண்டியது ஒளிப்பதிவு .மிகவும் அருமையாக நவீனமாக இருந்தது .இந்திய திரை படத்துக்கு ஈடாக இருந்தது ஒளிப்பதிவு இருந்தும் சில இடங்களில் வழமையான பாணி தெரிந்தது .ஒளிப்பதிவாளர் அண்ட் எடிட்டர் சுரேன் கு பெரிய ஹன்ட்சொப்... மற்றையது கதை மற்றும் திரை கதை .முகிலன் அண்ணா சொல்ல வந்த கதையை மிகவும் சூப்பர் ராக திரையிலே காட்டியிருக்கிறார் ஒவ்வொரு fram உம செமையாக இருந்தது மிகவும் ரசித்தேன் .
திரை கதை - பசுவிலிருந்து வரும் பால் தேவை அற்ற விடயங்களுக்கு செல்கிறது அனால் தேவை யான விடயம் என்று வரும்போது அது தீர்ந்து விடுகிறது ....இந்தப்படம் பலர் மனதிலி விழிப்புணர்வை ஈட்படுதும் என்பதில் doubt இல்ல......மற்றையது முக்கியமாக நடிப்பு .அனைத்து நடிகர்களும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.ஓவர் அக்டிங் என்று ஒன்றும் இல்லை .....அனைத்து நடிகர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்
இசை -கதைக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது கேட்பதற்கும் கதைக்குரிய பீல் லை அப்டியே கொடுத்தது இருந்தும் எதோ நமக்கு நண்பன் படத்தின் BGM கேட்டல் போல் இருந்தது.
மொத்தத்தில் '' பாற்கரன்'' அசத்தல் .
எம்மவரின் படைப்பு என்று சொல்லி பெருமை படகூடிய படைப்பு .
நெடுந்தீவு முகிலன் அண்ணாக்கு மனமார்ந்த பாராட்டுகள்.
ரசிகனாக சிறிய வேண்டுகோள் entertainment படமாகவும் love பேஸ் பண்ணின படங்களையும் வார்த்தைகள் உள்ள படமாகவும் உங்களிடம் இருந்து எதிர்பாக்கிறோம்..
நன்றி
AD
No comments:
Post a Comment